Breaking News

நடைப்பெற வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆலோசனை

 



வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் வில்லியனூர் கொம்யூன் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், வில்லியனூர் கொம்யூன் ஆணையர் ரமேஷ், செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலைப் பொறியாளர் சத்திய நாராயணா மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


அப்போது, வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட தில்லை நகர், மணவெளி, எஸ் எம் வி,புரம், சுல்தான் பேட்டை ரகமத்நகர், ஒதியம்பட்டு, நடராஜன் நகர், மூலக்கடை, முத்துப்பிள்ளைபாளையம், பட்டானிக்களம், ஓம்சக்தி நகர், வசந்தம் நகர், உத்திரவாகினிபேட், பெரியபேட், அம்பேத்கர் நகர், ஆத்துவாய்க்கால்பேட் ஆகிய பகுதிகளில் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் சாலை, கழிவுநீர் வாய்க்கால், குடிநீர் குழாய் அமைத்தல் போன்ற பணிகளை துரிதாக செய்து முடிக்க வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!