புதுச்சேரியில் இதுவரை 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
புதுச்சேரியில் கடந்த வாரம் மருத்துவமனையை அணுகிய நோயாளிகளில் டெங்கு, சிக்குன் குனியா மற்றும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மகாத்மா காந்தி மருத்துவமனையில் தனிவார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்,
மேலும், “இந்த கொரோனா நோயாளிகள் மூன்று நாள் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துவிடுகிறார்கள். இதுவரை எந்தவிதமான தீவிர பாதிப்பும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோரிமேடு டி.பி மருத்துவமனையில் 10 ஐசியூ படுக்கைகள் மற்றும் 2 வெண்டிலேட்டர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து அதிக பாதிப்புடையவர்கள் அங்கு அனுமதிக்கப்படுவர் நோயாளிகள் மட்டும் முககவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் அணிய தேவையில்லை. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வரவில்லை. இருந்தாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது
No comments