Breaking News

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் CM CARE திட்டம்

 




"புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்கு முதலமைச்சரின் CM CARE திட்டம் - 2023 இத்திட்டமானது புதியதாக பிறந்த பெண் குழந்தைக்கு ரூபாய்.50,000/- வைப்பு நிதியாக வங்கிக் கணக்கில் புதுச்சேரி அரசு CM CARE திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

அதில் முதல் கட்டமாக காரைக்கால் பகுதியை சேர்ந்த 31 பயனாளர்களுக்கு புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் PRN_திருமுருகன் வழங்கினார்.

புதுச்சேரியில் உள்ள ஒரு தபால் அலுவலகம்/பட்டியலிடப்பட்ட வணிக வங்கியில் பெண் குழந்தையின் பெயரில் ₹ 50,000 டெபாசிட் செய்யப்படும், அதில் பெற்றோர்/பாதுகாவலர் ஒருவர் தனிப்பட்ட சேமிப்பு/நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

தகுதி, 17-03-2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த பெண் குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறத் தகுதியுடையவர்கள்.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் பொறுப்பு அதிகாரி காஞ்சனா உடனிருந்தார்.

No comments

Copying is disabled on this page!