காரைக்கால் சேமியன்குளம் பகுதியில் அமைந்துள்ள இலாஹி பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வம்.
மிலாதுவிழாவை முன்னிட்டு காரைக்கால் சேமியான்குளம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இலாஹி பள்ளிவாசல் சார்பில் மீலாதுவிழா ஊர்வம் நடைபற்றது. இலாஹி பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மாணவ மாணவியர்கள் மற்றும் ஜமாத்தார்கள் பங்குபெற்றனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்ற மாணவ மாணவியர்களுக்கு மத பாகுபாடின்றி பொதுமக்கள் தங்கலால் இயன்ற பிஸ்கட் மற்றும் மிட்டாய்களை வழங்கி சிறுவர்களுக்கு சிறப்பித்தனர். இவ்விழா ஏற்பாடுகளை ஹஜ்ஜி முகமது தலைமையில் இலாஹி பள்ளிவாசல் நிர்வாக பொருப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments