Breaking News

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை..


முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பல்வேறு அரசியல் கட்சியினர் ராஜீவ் காந்தியின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் அரசு சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ராஜீவ் காந்தி சதுக்கத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதன் பின்னர் வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ரங்கசாமி உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோன்று காங்கிரஸ் சார்பிலும் ராஜீவ் காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் நிறைவடையத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றனர்.


No comments

Copying is disabled on this page!