தூத்துக்குடியில் மக்கள்குறைதீர்நாள் கூட்டம்: மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள்குறைதீர்நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கனை பெற்றுக்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்டஆட்சியர் இளம்பகவத் தலைமையில் மக்கள்குறைதீர்நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டாமாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுவேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 523 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் இளம்பகவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 53 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய்அலுவலர் (பொ) மாரிமுத்து, சமூகபாதுகாப்பு திட்டதனித்துணை ஆட்சியர் ஹபிபூர்ரஹ்மான், மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பிரம்மநாயகம் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments