Breaking News

தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.


கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் பொன் ஜெயராமன் தலைமை வகித்தார். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  

தொடர்ந்து இக் கூட்டத்தில் பட்டப்படிப்பு மற்றும் பி.எட் முடித்த தகுதி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வில் வட்டார கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பணி வழங்கப்படுதல். ஆய்வக உதவியாளர் பணியிடத்திலிருந்து இளநிலை உதவியாளராக பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து மீண்டும் பதவிரக்கம் செய்வது. சிறப்பு நிகழ்வாக கருதி பணிமார்கள் பெற்று பணிபுரிந்து வருபவர்களுக்கு ஒரே அரசாணையில் தகுதிக்கு அன்பரவும் முடிந்து ஆணை வழங்கிடவும் ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கூடிய வகையில் உரிய விதித்திருத்தம் வழங்க கோருதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானங்கள் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டன. 

மேலும் இக்கூட்டத்தில் கீழ்கண்ட நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும்  10.10.2024 நாளன்று பெருந்துறை முறையீட்டு நடத்தி முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் கோரிக்கை மனிதனை அனைத்து உயர்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்புவது இதனை தமிழ்நாடு அரசு ஏற்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பெருந்துறை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது என மாநிலத் தலைவர் பொன் ஜெயராம் கூறினார்.மேலும் இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நா. வினோத்குமார். ராஜேஷ் மாநில பொருளாளர் விஜய மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!