கோதண்டராமாபுரம் செங்கல் சூலையில் பணி செய்து வந்த வடமாநில தொழிலாளி தீயில் விழுந்து உயிரிழப்பு.
திருவள்ளூர் மாவட்டம் கனக்கம்மாச்சத்திரம் அடுத்த கோதண்டராமாபுரம் பகுதியில் அருண் என்பவரது செங்கல் சூலையில் உத்தர பிரதேசம் மாநிலம் பக்தன் தாலுக்காவிற்குட்பட்ட செங்கல்பூர் கிராமத்தை சார்ந்த தர்ம நாராயணண் என்பவரது மகன் தினேஷ்குமார் வயது (60) என்பவர் கோதண்டராமாபுரம் கிராமத்தில் உள்ள செங்கல் சூலையில் ணி செய்துவந்தார்.
செங்கல் சூலையின் மேலே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தவறி விழுந்ததில் பலத்த தீக்காயங்களோடு இருந்த தினேஷ்குமாரை உடன் வேலை செய்துக்கொண்டிருந்தவர்கள் மீட்டு திருத்தணி அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 80 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்களுடன் இருந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதை குறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
No comments