உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற தங்க கருட வாஹனத்தில் காட்சி அளித்தார் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷமிட்டு திருப்பல்லாக்கில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவம் நடைபெற்று வருவது வழக்கம் அது போல் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 02ஆம் தேதி தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பிரசன்ன வெங்கடேச பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருப்பல்லக்கில் உற்சவம் வந்து பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்பொழுது பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தங்க கருட வாகனத்தில் திருப்பல்லாக்கில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் தொடர்ந்து கோலாட்டம் ஆஞ்சநேயர் வேடமிட்டு ஆடிக்கொண்டு முக்கிய வீதி வழியாக வந்தப்பொழுது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு ஏராளமான பக்தர்கள் தீபாரதனை எடுத்து வழிபட்டனர்.
No comments